செய்திகள் :

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

post image

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள்.

வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள். எந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

"படிப்பு நிறுத்தம்...வெளியேற்றம்...நிதி உதவி ரத்து" - ட்ரம்ப்
"படிப்பு நிறுத்தம்...வெளியேற்றம்...நிதி உதவி ரத்து" - ட்ரம்ப்

மீறினால் என்ன?

பாலஸ்தீனம் ஆதரவு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தற்போது அமெரிக்க அரசு அவர்களாகவே சொந்த நாட்டிற்கு திரும்புமாறு மெயில் அனுப்பியுள்ளது.

இந்த எச்சரிக்கையை மீறினால் அமெரிக்க அரசு வெளியேற்றம், விசா ரத்து போன்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படியான மெயில் அமெரிக்காவில் படிக்கும் பல இந்திய மாணவர்களுக்கும் சென்றுள்ளது.

நாடு திரும்புவதற்கான வசதிகள் அறிமுகம்!

இந்த செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு அவர்களாகவே கிளம்ப உதவ CBP ஹோம் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் தங்களது பாஸ்போர்ட்டுகளை கொடுத்து விசா பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களது விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு 'Catch and Revoke' என்ற ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.

குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது! யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.... மேலும் பார்க்க

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க