செய்திகள் :

ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்: அர்ஷ்தீப் சிங்

post image

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ரஷ்தீப் சிங் சுய விமர்சனத்தை செய்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் 1 சதவிகிதம் முன்னேற வேண்டுமென விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

66 ஐபிஎல் போட்டிகளில் 78 விக்கெட்டுகளும் 63 சர்வதேச டி20 போட்டிகளில் 99 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.

26 வயதாகும் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் போட்டியில் டெத் ஓவரில் சிறப்பாக பந்துவீசுகிறார்.

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் அர்ஷ்தீப் சிங் பேசியதாவது:

ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்

ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு நாளும் 1 அல்லது 1.5 சதவிகிதம் முன்னேற வேண்டும் என்பதே எனது முக்கியமான நோக்கம்.

உலகத்திலேயே மிகப்பெரிய இடம் எங்கிருக்கிறதென்றால் அது நாம் முன்னேறுவதற்கான இடம்தான் எப்போதும் நினைக்கிறேன்.

அதனால், எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுய விமர்சனம் செய்து என்னுடைய திறமைகளை உயர்த்த விரும்புகிறேன்.

அது 1 சதவிகிதமோ அல்லது 1.5 சதவிகிதமோ இருந்தாலும் பரவாயில்லை.

சுயநலமற்ற கேப்டன் ஷ்ரேயாஸ்

ஏற்கனவே, துலீப் கோப்பையில் ஷ்ரேயாஸ் தலைமையில் விளையாடியுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளேன்.

அவர் எப்போதும் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்.

நான் கவனித்ததெல்லாம் அவர் இன்னமும் அதேமாதிரிதான் இருக்கிறார். கடுமையான கட்டளைகளை அளிக்காமல் வீரர்களின் திறமைகளை நம்ப வேண்டும் எனக் கூறுகிறார்.

சுயநலமற்ற தன்மையை அணிக்கு அளிக்கிறார். நாங்கள் அவருக்கு துணையாக இருந்து கோப்பையை மீண்டும் மீண்டும் வெல்ல வேண்டும் என்றார்.

அழுத்தத்தில் பந்துவீச பிடிக்கும்

எனது அணி அழுத்தத்தில் இருக்கும்போது நான் முன்னோக்கி வர விரும்புகிறேன். அது ரன்களை கட்டுப்படுத்துவது ஆகட்டும் அல்லது விக்கெட் எடுப்பதாகட்டும் நான் அதைச் செய்வேன்.

முக்கியமான நேரத்தில் கேப்டன்கள் எனக்கு ஓவரை தருகிறார்கள் எனில் அவர்கள் என்னை நம்புகிறார்கள் என்றே அர்த்தம்.

என்ன சூழ்நிலையாக இருந்தாலும் நான் கூடுதல் பொறுப்பை மிகவும் நேசிக்கிறேன். அழுத்தம் குறித்து நினைக்காமல் பந்தினை எப்படி வீசலாம் என நினைக்கிறேன். வெற்றி ஓரிரவில் வந்துவிடாது. எந்தப் பின்னடைவும் எனது பந்துவீச்சைப் பாதிக்காது.

எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அணி வெற்றிபெற எனது முழுமையையிம் தருவேன் என்றார்.

7 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபியின் சொந்த மண்ணில் விராட் கோலி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் லக்னௌ தோல்வி: சஞ்சீவ் கோயங்கா கூறியதென்ன?

லக்னௌ அணி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தது குறித்து அதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். கடந்த 2022இல் இருந்து லக்னௌ அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறத... மேலும் பார்க்க

ஆர்சிபி பேட்டிங்: குஜராத் அணியில் ரபாடா விலகல்!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன. இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்... மேலும் பார்க்க

எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!

ஐபிஎல் 18ஆவது சீசனில் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை நேற்று (திங்கள்கிழமை) சாய்த்தது.முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவா்களில் 171/7 ... மேலும் பார்க்க

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வி... மேலும் பார்க்க

எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க