செய்திகள் :

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

post image

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித்தொழிலாளி பெண்களின் வங்கிக் கணக்கை பெற்று, பணத்தை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான நந்தகோபால், யுவராஜ்

இது குறித்து தேனி சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``தேனி ஆலை உரிமையாளர் மகனுக்கு திருமண வரன் தேடி வந்துள்ளனர். அவர்கள் திருமண வரன் தேடும் செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஸ்ரீ ஹிரிணி என்ற ஐடியில் இருந்து ஒரு பொருத்தம் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த ஐடியை தொடர்பு கொண்டு பேசி, பிறகு வாட்ஸ்-அப்பில் பழகியுள்ளனர். ஸ்ரீ ஹிரிணி என்ற ஐடியில் பேசியவர், விரைவில் திருமண ஏற்பாடுகளை செய்யலாம், முன்னதாக தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டியுள்ளதாகக் கூறி இளைஞரையும் முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் 88.58 லட்ச ரூபாயை இளைஞர் கொடுத்துள்ளார். பிறகு அந்த ஐடியில் பேசியவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்தார்.

அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர் இரண்டு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியிருக்கிறார். கூலித்தொழிலாளர்களான 2 பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்து அவர்கள் மூலமாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். முதலில் இவர்களை ஏமாற்றிய, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பரை பிடித்தோம்.

கைதான பத்மநாபன், சிவா

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய யுவராஜ், பத்மநாபன், சிவா ஆகியோரையும் பிடித்தோம். அப்போதுதான் இவர்கள் டெலிகிராம் மூலம் கம்போடியா சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 3.90 லட்ச ரூபாய் ரொக்கம், 6 போன்கள், 29 டெபிட் கார்டுகள், 18 காசோலை வில்லைகள், 12 வங்கிக் கணக்குகள், 46 சிம் கார்டுகளை, வங்கி கணக்குகள் பற்றி எழுதப்பட்ட 2 டைரிகளை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி - புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்... மேலும் பார்க்க

`யாரு முக்கியம்?' - பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த ஆண் நண்பர்; 2 குழந்தைகள் தவிப்பு

சென்னை பல்லாவரம் அருகே வசித்து வந்தவர் ஜோதி ( 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை செ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க