எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மொபைல் வங்கி, ஏடிஎம் மூலம் பணமெடுத்தல், கூகுள் பே போன்ற செயலிகளில் பணம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இன்று காலை 8.15 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை சிக்கல் இருந்ததாகவும், காலை முதல் சுமார் ஆயிரம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.