செய்திகள் :

``கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்'' - 140 கி.மீ துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானி உருக்கம்

post image

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. மிகப்பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் உலக தலைவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து அங்குள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு மையத்தை கவனித்து வருகிறார். அதோடு அங்கு நலிவடைந்த வனவிலங்குகளுக்காக பிரம்மாண்ட முகாம் ஒன்றை ஆனந்த் அம்பானி அமைத்திருக்கிறார். வந்தாரா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த முகாமிற்கு சமீபத்தில் மத்திய அரசு விருது கொடுத்து கெளரவித்தது.

அதோடு பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் வந்தாராவிற்கு வந்து சென்றார். ஆனந்த் அம்பானி வன விலங்குகள் மட்டுமல்லாது ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்.

துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானி
துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி ஜாம்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் குஜராத்தின் மிகவும் பிரபலமான துவாரகா கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து செல்கிறார். அவருடன் அவரது கம்பெனி முக்கிய பிரமுகர்கள் செல்கின்றனர். மேலும் இப்பாத யாத்திரையில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் சிகர் பஹாரியா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இப்பாதயாத்திரை கடந்த 5 நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஆனந்த் அம்பானி 140 கிலோமீட்டர் நடந்து அடுத்த 4 நாட்களுக்குள் துவாரகா கோயிலுக்குச் சென்றடைவார்.

ஆனந்த் அம்பானி

இது குறித்து ஆனந்த் அம்பானி வெளியிட்டுள்ள வீடியோவில், ''கடவுள் துவாரகாதீஷ் அருளால் அடுத்த 2-4 நாள்களில் துவாரகா சென்றடைவோம். துவாரகாதீஷ் மீது இளைஞர்கள் நம்பிக்கை வையுங்கள். எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும் துவாரகாதீஷை நினைத்துக்கொள்ளுங்கள். எந்த தடங்கலும் இல்லாமல் வேலை முடிவடையும். கடவுள் இருக்கும்போது அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

கடந்த ஜனவரி மாதம் ஏற்கெனவே ஆனந்த் அம்பானி தனது தந்தை முகேஷ் அம்பானியுடன் துவாரகா வந்து வழிபட்டுச்சென்றார். அடிக்கடி அம்பானி குடும்பம் துவாரகா கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ரத்தன் டாடா உயில்: சமையல்காரர், உதவியாளர், பணியாளர்கள், நண்பர்கள்... யாருக்கு என்ன கிடைக்கும்?

தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய உயில்தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறக்கும் முன்பு உயில் எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் ரூ.3900 கோடி மதிப்புள்ள சொத்துகளை ... மேலும் பார்க்க

`பாவம், கொல்லாதீங்க..' - பாதயாத்திரையில் 250 கோழிகளை மீட்ட ஆனந்த் அம்பானி! என்ன செய்தார் தெரியுமா?

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தற்போது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு 140 கி.மீ நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பலத்த பாதுகாப்புடன் நடைபயண... மேலும் பார்க்க

நடுரோட்டில் நடனமாடிய மனைவி; சஸ்பெண்ட் ஆன கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோவால் நடவடிக்கை

சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவு செய்து அதிகமானோர் சம்பாதிக்கின்றனர். சிலர் பொழுதுபோக்கிற்காக இது போன்று சமூக வலைதளத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. அந்த வீடியோ சில நேரங்களில் அதனை வெளியிட்டவர்களுக்க... மேலும் பார்க்க

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: குற்றவாளி டைகர் மேமன் சொத்துகளை மத்திய அரசிடம் ஒப்படைத்த நீதிமன்றம்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தது. மும்பையில் டைகர் மேமன் குடும்பத்திற்க... மேலும் பார்க்க

UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார். பிப்ரவர... மேலும் பார்க்க

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்ட... மேலும் பார்க்க