செய்திகள் :

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: குற்றவாளி டைகர் மேமன் சொத்துகளை மத்திய அரசிடம் ஒப்படைத்த நீதிமன்றம்

post image

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தது.

மும்பையில் டைகர் மேமன் குடும்பத்திற்கு வீடு, அலுவலகம், காலி இடம் என 14 சொத்துகள் இருக்கிறது. அந்த சொத்துக்கள் இன்னும் கோர்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதையடுத்து அச்சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரி மத்திய அரசு தடா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு

இதனை ஆய்வு செய்த தடா கோர்ட் டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு வீடு, மாகிம் அலுவலகம், மும்பை மாகிம், சாந்தாகுரூஸில் உள்ள காலி நிலம், குர்லாவில் இரண்டு வீடு, மனீஷ் மார்க்கெட்டில் 3 கடைகள் என மொத்தம் 14 சொத்துகளை சிறப்பு நீதிமன்றம் மத்திய அரசிடம் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அச்சொத்துக்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அச்சொத்துக்களை மத்திய அரசு விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம்

ஏற்கெனவே டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான 3 வீடுகள் இருந்த அல் ஹுசைனி என்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கட்டிடவாசிகள் முடிவு செய்தனர்.

அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி கட்டிடவாசிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அதற்கு ஒப்புதல் அளித்தது.

ஏலம் போன தாவூத் இப்ராகிம் சொத்து

மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தாவூத் இப்ராகிற்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்தது. அந்த சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்தது. ஆரம்பத்தில் அந்த சொத்துகளை யாரும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அனைத்து சொத்துகளும் ஏலம் விடப்பட்டுவிட்டது.

குண்டு வெடிப்பு

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்ததொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு அதற்கு ஏற்பாடு செய்த தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உள்பட இதில் தொடர்புடைய அனைவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

1993-ம் ஆண்டு மும்பையில் மார்ச் 12-ம் தேதி 12 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தடா சிறப்பு நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் நடந்தது. இதில் நடிகர் சஞ்சய் தத் உள்பட 100 பேர் தண்டிக்கப்பட்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பாவம், கொல்லாதீங்க..' - பாதயாத்திரையில் 250 கோழிகளை மீட்ட ஆனந்த் அம்பானி! என்ன செய்தார் தெரியுமா?

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தற்போது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு 140 கி.மீ நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பலத்த பாதுகாப்புடன் நடைபயண... மேலும் பார்க்க

``கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்'' - 140 கி.மீ துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானி உருக்கம்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. மிகப்பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் உலக தலைவர்கள் என ப... மேலும் பார்க்க

நடுரோட்டில் நடனமாடிய மனைவி; சஸ்பெண்ட் ஆன கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோவால் நடவடிக்கை

சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவு செய்து அதிகமானோர் சம்பாதிக்கின்றனர். சிலர் பொழுதுபோக்கிற்காக இது போன்று சமூக வலைதளத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. அந்த வீடியோ சில நேரங்களில் அதனை வெளியிட்டவர்களுக்க... மேலும் பார்க்க

UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார். பிப்ரவர... மேலும் பார்க்க

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்ட... மேலும் பார்க்க

UP: ``மீரட் சம்பவம் போல நடக்க கூடாது'' - மனைவியை அவர் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களில் தொடர்ந்து மனைவியால்... மேலும் பார்க்க