செய்திகள் :

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

post image

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும்  ஒலித்து வருகிறது.

'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்டி ட்டே டேனா, அப்பத் ட்டி யா, அப்பத் ட்டி ட்டே டேக்கு' என்ற வரி, தாய்லாந்து நாட்டின் நாட்டுப்புறப் பாடலின் அங்கமாக இடம்பெற்ற சொற்றொடராகும்.

Viral Song

தற்போது, அது உலக அளவில் பிரபலமாகித் தனக்கெனப் பல தரப்பு ரசிகர்களை உருவாக்கியுள்ளது. 

தாய்லாந்து நாட்டின் இசைக் கலைஞரான நொய் சிர்னிம், இந்த வரியை முதன்முதலாக 'டோங் பாவே க்ரஹ்மம்' என்ற பாடலில்  நகைச்சுவையாகப் பயன்படுத்தி இருந்தார்.

ஆனால், இந்த பாடலின் வரிகள் மற்றும் இசையைப் படைத்தவர் சக் பக்னம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலால் பிரபலமாகிய நொய் சிர்னிம், 2010 இல் வெளிவந்த 'லுவாங் ஃபை டெங் 3' என அழைக்கப்படும் 'ஹோலி மேன் 3' திரைப்படத்தில் இந்த பாடலைப் பாடியிருந்தார்.

அவர் பாடிய 'அணன் ட்ட பத் சயே, அபத் ட்ட ட்டே டேனா... ' என்ற வரி, 'அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா.. ' எனத் தமிழில் ஒலிப்பது போலவே இருந்தது.
வைரல் பாடல்

தாய்லாந்திலும், தெற்காசிய நாடுகளிலும் 'ஹோலி மேன் 3' திரைப்படம் பிரபலமானதைத் தொடர்ந்து, 'டோங் பாவே க்ரஹ்மம்' பாடல் யூடியூப் மற்றும் பிற ஓடிடி தளங்களில் 'லுக் துங்க் காமெடி' ஆல்பத்தின் அங்கமாக நவம்பர் 2014 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

2019 இல், பல மொழிகளில் பாடும் தனது பாடும் திறனை மேடையில் வெளிப்படுத்திய 11 வயதான நாட்டுப்புற மேடை கலைஞர் நிக்கென் சாலின்டரி, 'அணன் ட்ட பத் சயே' வரியை ஏற்கனவே பயன்படுத்தி பாடியிருந்தார். 

'ப்ளாக்பிங்க்' கேர்ள் குரூப்பின் பாடகியான பாடகர் ரோஸ், அக்டோபர் 2024 இல் ப்ரூணோ மார்ஸ் என்ற பாடகரோடு இணைந்து 'ஏபிடி' என்ற தலைப்புடைய பாடலை வெளியிட்டார்.

நிக்கென் சாலின்டரி பாடிய 'அணன் ட்ட பத் சயே' பாடல் 'தாய்லாந்து ஏபிடி' என்ற தலைப்பில் மீண்டும் பிரபலமாகியது. 

Viral Song

'அணன் ட்ட பத் சயே, அபத் ட்டி ட்டே டேனா...' என்ற பாடல் வரிகள், 'அண்ணண பாத்தியா, அப்பாட்ட கேட்டியா...' எனத் தமிழில் கேட்பது போன்ற சிறப்போடு இருப்பதால், தமிழகத்தில் தனக்கெனத் தனி ரசிகர்களைக் கொண்டுள்ளது தாய்லாந்து நாட்டின் இந்த நாட்டுப்புறப் பாடல். 

- மு. சுபஸ்ரீ.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார். பிப்ரவர... மேலும் பார்க்க

UP: ``மீரட் சம்பவம் போல நடக்க கூடாது'' - மனைவியை அவர் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களில் தொடர்ந்து மனைவியால்... மேலும் பார்க்க

Ramalan: `அவர்கள் நமக்கும் நாம் அவர்களுக்கும் செய்கிறோம்' நல்லிணக்கம் காக்கும் ரமலான் நோன்புக் கஞ்சி

இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் பெரும்பகுதி முகாமிட்டிருந்தது வட இந்தியாவில்தான் என்பது வரலாறு சொல்லும் தகவல். அதனால்தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை ஆண்டிருக்கிறார்கள் என்ற உணர்வால... மேலும் பார்க்க

5 ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக சாப்பிட முயன்று சிக்கிய Influencer; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் ஒருவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயன்று மாட்டியதால், சாப்பிட்ட பஃபே சாப்பாட்டுக்கு 3,600 ரூபாய் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்... மேலும் பார்க்க

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்

தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று... மேலும் பார்க்க

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க