செய்திகள் :

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்

post image

தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.

கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பின்னர் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட அவரது மகன் அதிக் மருத்துவரின் மரண அறிவிப்பை ஏற்க முடியாமல் வேறு ஒரு இதய சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அந்த மருத்துவர்களும் லைக் அகமதுவின் மரணத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். அவரது உடலை ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற போது மகன் அதனை பின்தொடர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

துக்கம் தாளாமல் பின்தொடர்ந்து வந்த மகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலே சரிந்து விழுந்திருக்கிறார்.

உள்ளூர் வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தந்தை மகன் இருவரின் இறுதிச்சடங்களும் ஒன்றாக நடைபெற்றது. லைக் அகமதுவின் இரண்டு மகன்களில் இளையவரான அதிக், தனது தந்தையுடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் குடும்பத்தினர்கள் மத்தியில் கிராமவாசிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

`Snickers தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்' - நண்பர்கள் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!

Snickers தீமில் சவப்பெட்டி வேண்டும் என்று விளையாட்டாக ஒருமுறை கேட்ட நபருக்கு, அவரது விருப்பப்படியே அடக்கம் நடந்துள்ளது. வாழ்க்கை எல்லாருக்கும் நாம் நினைத்தபடி அமைவதில்லை. மரணமும் அப்படியே. ஆனால் பால் ... மேலும் பார்க்க

Wolfdog: 'ஓநாயுடன் கலப்பு' - ரூ.50 கோடிக்கு அரிய வகை நாயை வாங்கிய பெங்களூரு நபர்!

உலகம் முழுவதுமே மனிதர்களிடம் பிரபலமான செல்லப்பிராணியாக நாய்கள் இருக்கின்றன. நாய்கள் அதன் மேல் அதன் உரிமையாளர்கள் கொண்டிருக்கும் அன்பும், ஒரு நல்ல நாய்க்காக அவர்கள் செய்யும் விஷயங்களும் ஆச்சர்யப்படுத்த... மேலும் பார்க்க

39 மனைவிகள், 94 குழந்தைகள்; `உலகின் மிகப்பெரிய குடும்பம்' இதுதான்!

உலகின் மிகப்பெரிய குடும்பமாக மிசோரம் இல் உள்ள ஒரு குடும்பம் அடையாளம் பெற்றுள்ளது. சியோனா சனா என்ற நபர் 39 முறை திருமணம் செய்து கொண்டு, 94 குழந்தைகளுக்கு தந்தையாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 33 பேர ... மேலும் பார்க்க

வரலாற்றுச் சிறப்பு மிக்க மும்பை பங்களாவை ரூ.276 கோடிக்கு வாங்கிய அம்பானி உறவினர் - யார் இவர்?

மும்பையில் சொத்து விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தென்மும்பை, பாந்த்ரா, அந்தேரி போன்ற சில பகுதியில் வீடுகளின் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. மும்பையின் தென... மேலும் பார்க்க

MrBeast: பள்ளிக் குழந்தைகளுக்கு சொந்த செலவில் காலை உணவு வழங்கும் யூடியூபர், என்ன சொல்கிறார்?

மிஸ்டர் பீஸ்ட் என்று மக்களால் அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், அமெரிக்காவின் கேன்சஸ் பகுதியில் வசித்து வருகிறார். 2012-ல் Mr Beast யூடியூப் சேனலை தொடங்கி, 2017-ல் அதிக சந்தாதாரர்கள் கொண்டு மிகப்பெரிய... மேலும் பார்க்க