Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்?
அதிகப்படியான வியர்வை, உடல் சூடு, தலையில் படியும் அழுக்குகள் எனக் கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்னைகள் ஏராளம்.
அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டா என்பது பற்றி பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசந்தரா.

* கற்றாழையிலிருக்கும் நுங்கு போன்ற சதைப்பகுதி நான்கு டீஸ்பூன், பெரிய நெல்லிக்காய் சாறு நான்கு டீஸ்பூன் எடுத்து தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடிகொட்டுதல் பிரச்னை நீங்கி, தலைமுடி பளபளப்பாக இருக்கும்.
* வறட்சியால் முடி உதிர்கிறது எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி உறுதியோடு இருக்கும். உதிர்வதும் நிற்கும். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர வேண்டும்.

*தலைக்குக் குளிக்கும் நீரில் புதினா ஜூஸ் 10 டீஸ்பூன் கலந்து குளிக்கலாம் அல்லது தண்ணீரை லேசாகக் கொதிக்க வைத்து சிறிது வேப்பிலையை அதில் சேர்த்து அடுப்பை அணைத்து ஆறவிடவும். அரை மணி நேரம் கழித்து சாறு இறங்கிய தண்ணீரை நீங்கள் குளிக்கும் டப்பில் ஊற்றி கூடுதலாக தண்ணீர் சேர்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
* அவகாடோ, வாழைப்பழம் இரண்டையும் சம அளவில் எடுத்துக் குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால், கூந்தல் பட்டுபோல மிருதுவாக இருக்கும். கூந்தலின் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

* வெள்ளரிக்காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலினால் தலையில் உருவாகும் சிறுகட்டிகள் மறையும்.
* கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய் மூன்றையும் சம அளவில் எடுத்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி 10 நாள்கள் அதை வெயில் படும் இடத்தில் வைக்கவும். பிறகு வாரம் ஒருமுறை தலை மற்றும் உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.
எண்ணெய் தேய்த்த அன்று ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிப்பதைவிட, மறுநாள் உபயோகித்தால் முடி உறுதியுடன் இருக்கும்.

* தினமும் ஷாம்பு பயன்படுத்துவதால் இளவயதிலேயே நரை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஷாம்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக்கொட்டையை வாங்கி சுடுநீரில் ஊறவைத்து ஒரு மணிநேரம் கழித்து அந்தத் தண்ணீரை வடிகட்டி தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks