செய்திகள் :

ஹமாஸ் படைகளுக்கு எதிராக போராடும் பாலஸ்தீனர்கள்?

post image

காஸா பகுதியில் போருக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸ் படையினருக்கு எதிராக பாலஸ்தீனர்கள் முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகின்றது.

காஸாவின் வடக்கு நகரமான பெயிட் லஹியாவில் போரில் சேதாரமடைந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் போருக்கு எதிரான போராட்டத்தில் நேற்று (மார்ச் 25) ஈடுபட்டனர்.

இதுகுறித்து வெளியான விடியோக்களில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ’போரை நிறுத்துங்கள்’, ‘நாங்கள் சாக மறுக்கின்றோம்’, ‘எங்கள் குழந்தைகளின் ரத்தம் மலிவானது இல்லை’ போன்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாடுகளுக்கும் நிவாரணப் பொருள்கள் காஸாவினுள் நுழையாமல் தடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போருக்கு எதிராக சிறிய மக்கள் குழுவினால் துவங்கப்பட்ட இந்த போராட்டத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும், போராட்டத்தின் இடையே பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸுக்கு எதிராக ”ஹமாஸ் வெளியேற வேண்டும்’ என முழங்கப்பட்ட கோஷங்கள் அனைத்தும் வெளியான விடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரை சுமார் 17 மாதங்களாக நீடித்த போரின் நிறுத்ததை முறித்து இம்மாதம் இஸ்ரேல் காஸா மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது. ஹமாஸிடமுள்ள 59 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படவில்லை என்றால் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

தற்போது துவங்கப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் போரில் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 மார்ச் மாதத்தின் துவக்கத்தில் காஸாவினுள் நுழையும் உணவுகள், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க