செய்திகள் :

பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?

post image

முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரோஹித் சர்மா தினமும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் முதலிரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. இதில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.

முதல் போட்டியில் 0, 2ஆவது போட்டியில் 8 ரன்களுக்கு போல்ட் ஆனார்.

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா மோசமான நிலையில் இருக்கிறார். 3, 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ரோஹித் சர்மா தற்போது இல்லை.

தினமும் காலையில் கடினமாக உழைத்து தன்னை சிறந்த நிலையில் வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் ரோஹித் சர்மா.

சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தபோது

ஏனெனில், அவரை விட்டு பேட்டிங் கை நழுவிச் செல்கிறது. அவர் இப்போதும் தன்னுடைய இயற்கையான திறமைகளையும் உள்ளுணர்வுகளை மட்டுமே நம்பியிருக்கிறார்.

வான்கடே பிட்ச்சிலும் மும்பை தோற்கும்

ஏபிடி, கிளாசன் தவிர மற்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்திய மண்ணில் சரியாக விளையாடுவதில்லை.

ரியான் ரிக்கல்டனுக்கு சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும். அவரைத் தவிர்த்து, திலக் வர்மா, சூர்யகுமார், ராபின் மின்ஸ் ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.

பேட்டிக்கு பந்து வருமென இவர்கள் நம்பியிருக்கிறார்கள். வேகமும் பவுன்சர்களும் இருக்கும் வான்கடே பிட்ச்சிலும் மும்பை அணி 12 அல்லது 13 ரன்கள் தேவைப்பட்ட இலக்கினை வெற்றி பெறாது. வேண்டுமானால் இலக்கிற்கு அருகில் வரலாம்.

அணிக்கு என்ன பிரச்னை?

குஜராத் டைட்டன்ஸ் முதலிரண்டு விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தனர். ஆனால், மும்பை அணி 35க்கு 2 விக்கெட்டுகள் ஆனார்கள். அதன்பிறகு திலக், சூர்யகுமார் பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டியுள்ளது. பின்னர் 190 ரன்களை துரத்திச் செல்லுவது கடினமாகிறது.

கடைசி நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பேட்டிங் நன்றாக செய்தார்கள். ஒரு ஓவரில் 15 அல்லது 20 ரன்கள் இருக்குமாறு விளையாடினார்கள்.

ஆட்டத்தில் ஈரப்பதமும் வரவே இல்லை. அதனால், மும்பை அணிக்கு எல்லாம் பின்னடைவையே ஏற்படுத்தியது.

இவையெல்லாம்விட 2 தோல்விகள் என்பது மும்பை இந்தியன்ஸுக்கு சகஜமானதுதான். அப்படி இருந்தும் சரியான வழியில் சென்றால் கோப்பையை வெல்லலாம் என்றார்.

ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்: அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ரஷ்தீப் சிங் சுய விமர்சனத்தை செய்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் 1 சதவிகிதம் முன்னேற வேண்டுமென விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்... மேலும் பார்க்க

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயி... மேலும் பார்க்க

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வினி குமார் 4 விக்கெ... மேலும் பார்க்க

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?

அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12... மேலும் பார்க்க