செய்திகள் :

அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?

post image

அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12-வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார். மும்பை அணியில் அஸ்வனி குமார் என்பவருக்கு முதல்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டது.

முதலாவது மற்றும் 2-வது ஓவர்கள் முறையே பவுல்ட் - தீபக் சஹர் வீச மூன்றாவது ஓவரை வீசும் வாய்ப்பு அஸ்வனி குமாருக்கு வழங்கப்பட்டது. அறிமுகமான போட்டியின் முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே விக்கெட்டை வீழ்த்தினார். ரிங்கு சிங் விக்கெட்டை வீழ்த்தியதுடன், மணீஷ் பாண்டேவையும், ரஸ்ஸலையும் தூக்கினார்.

யார் இந்த அஸ்வனி குமார்?

23 வயதான அஸ்வனி குமார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் ஆட்டத்தின் இறுதிக்கட்ட 16-20 வரையிலான ஓவர்களில் பந்துவீசுவதில் திறமை வாய்ந்தவர். கடந்த தொடரில் பஞ்சாப் அணியில் அஸ்வனி இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் மும்பை அணி அவரை ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

இதையும் படிக்க: ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!

2022 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் அறிமுகமான அஸ்வனி 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். இதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் 2 முதல் தரப் போட்டிகளிலும், 4 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். இவர் முதன் முதலாக பஞ்சாப் டி20 தொடரில் தெர் இ-பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதில், பிஎல்வி பிளாஸ்டர் அணிக்காக விளையாடி 4/36 விக்கெட்டை வீழ்த்தினார்.

சிறந்த வீரர்களால் எங்கள் அணி இல்லை. சிறந்த வீரர்களை உருவாக்கும் அணி என அனைவரால், சிறப்பிக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி, அஸ்வனி குமார் மட்டுமின்றி மேலும், இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

கேரள வீரர் விக்னேஷ் புதூர் சென்னைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத் தவிர்த்து ஆந்திர வீரர் சத்திய நாராயணாவும் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!

‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் பெங்களூரு- இன்று குஜராத்துடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 2) மோதுகின்றன.இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பெங்களூரு ‘ஹா... மேலும் பார்க்க

மூவா் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது. முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக... மேலும் பார்க்க

பூரண், பதோனி விளாசல்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னௌ அணி.முதலில் பேட் செய்த லக்னௌ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. லக்னௌ தரப்பில் அதிகபட்சமாக பூரண் 44, ப... மேலும் பார்க்க

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்... மேலும் பார்க்க

சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை, தில்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை(ஏப்ரல் 2) தொடங்குகிறது.சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடைய... மேலும் பார்க்க

எந்த அணிக்கும் இந்த நிலை வரலாம்; கேகேஆர் தோல்வி குறித்து ரமன்தீப் சிங்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரமன்தீப் சிங் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்... மேலும் பார்க்க