Siragadikka aasai : ரோகிணி அறையில் க்ருஷின் உடையை கண்டுப்பிடித்த முத்து, மீனா - அடுத்து?
சிறகடிக்க ஆசை சீரியல் த்ரில்லாக நகர்கிறது. ரோகிணி மாட்டிக் கொண்டது ஒருபுறம் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தாலும், அடுத்தடுத்து கதையில் நடக்கும் ட்விஸ்ட் சீரியலுக்கு பாராட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளது.
`ரோகிணியை நம்பாத முத்து’
நேற்றைய எபிசோடில் முத்து, `ரோகிணியை தான் நம்பவில்லை’ என்று மீனாவிடம் சொல்கிறார். ரோகிணியிடம் பல ரகசியங்கள் ஒளிந்திருப்பதாகக் கூறுகிறார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்து, ரோகிணியின் அறையை சோதனையிட நினைக்கிறார். அதற்கு மீனா சம்மதிக்கவில்லை.

ஒருவரின் அறையை அவர் இல்லாதபோது ஆராய்வது தவறு என்கிறார் மீனா. ‘ரோகிணி வீட்டில் இருக்கும் அனைவரையும் ஏமாற்றியிருக்கிறார், எனவே அவர் பற்றிய உண்மைகளை தெரிந்துக் கொள்ள அவரின் அறையை சோதிப்பது தவறில்லை என முத்து வாதிடுகிறார்.
முத்து ரூபாய் நாணயத்தை வைத்து டாஸ் செய்ய ரோகிணியின் அறையை சோதிக்கலாம் என முடிவு வருகிறது. மீனாவும் முத்துவும் ரோகிணியின் உடைமைகளை ஆராய்கின்றனர். அவரின் துணிகளுக்கு இடையில் ஒரு சிறுவனின் புதிய ஆடை இருப்பதை மீனா கண்டுபிடிக்கிறார்.
அந்த ஆடை க்ருஷுக்காக ரோகிணி வாங்கியது. ஆனால் மீனா மனோஜ் வாங்கி வைத்திருக்கலாம் என நினைக்கிறார். மீனா, முத்துவை பொறுத்தவரை க்ருஷ் மனோஜின் முன்னாள் காதலியின் மகன். இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் காலிங் பெல் அடிக்கிறது. எனவே அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வெளியே வருகின்றனர்.

முத்துவிடம் மீனா ரோகிணி பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்கிறார். அதை ரூமின் வாசலில் இருந்து மனோஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரோகிணி மனோஜின் வாழ்க்கையில் வந்த பிறகு தான் அவர் முன்னேறி இருக்கிறார்.
ரோகிணி மனோஜ் மீது அதிக பாசம் வைத்துள்ளார் என்றெல்லாம் மீனா சொல்கிறார். அதனை கேட்டு மனோஜ் ரோகிணியை விட்டுக் கொடுத்து விட்டோமே என்று யோசிக்கிறார். அதே சமயம் முத்துவிடம் தன்னை பற்றி பேச வேண்டாம் என திட்டி செல்கிறார்.
எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் வீட்டிற்கு பாட்டி வருகிறார். ரோகிணியையும் விஜயாவையும் வரவைக்கின்றனர்.ரோகிணியிடம் பாட்டி கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய சொல்கிறார். அண்ணாமலை வேற எதும் உண்மையை எங்ககிட்ட இருந்து மறைக்கிறியாம்மா எனக் கேட்கிறார். ரோகிணி என்ன பதில் சொல்வார், அடுத்து என்ன நடக்கும் என்பது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
இதனிடையே சீதா அருணின் காதலை ஏற்றுக் கொள்கிறார். முத்து ரோகிணி மீதான தன் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார். சமீபக் காலமாக சிறகடிக்க ஆசை சீரியலில் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது.!