செய்திகள் :

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

post image

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது.

இந்தப் போட்டியில் ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வனி குமார் 3 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற அஸ்வனி குமார் பேசியதாவது:

மதிய உணவு சாப்பிடமால் விளையாடியது ஏன்?

எனக்கு நன்றாக இருப்பதாக உணர்கிறேன். போட்டிக்கு முன்பாக சிறிதி அழுத்தம் இருந்தது. ஆனால், எங்களது மும்பை அணிக்கு நன்றி கூறியாக வேண்டும். ஏனெனில் அவர்கள் எனக்கு எந்தவித அழுத்தத்தையும் தரவில்லை.

முதலில் அழுத்தம் இருந்ததால் நான் மதிய உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. வாழைப்பழம் மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

ஆனால், பிறகு எனக்கு பசிக்கு எடுக்கவில்லை. நன்றாக விளையாடியதால் எனக்கு மகிழ்ச்சி.

கேப்டனின் அறிவுரை

எங்களுக்கென்று ஒரு திட்டம் இருந்தது. ஆனால், கேப்டன் ஹார்திக் பாண்டியா என்னிடம் ’உன்னுடைய முதல்போட்டி என்பதால் நீ விரும்பும்படி பந்துவீசு, போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடு’ என்றார். எனக்கு அது உதவியது.

அஸ்வனி குமாருடன் கேப்டன் ஹார்திக், து.கே. சூர்யகுமார்.

ஆண்ட்ரே ரஸல் எனது முதல் பந்தில் பவுண்டரி அடித்ததும் கேப்டன் ஹார்திக் பாண்டியா என்னிடம் ரஸல் உன் ஓவரில் அடிக்க முயற்சிக்கிறார். அதனால், அவருக்கு உடலுக்கு நேராக பந்துவீசு என அறிவுரைக் கூறினார்.

அதேமாதிரி என்னை அடிக்க நினைத்து ரஸல் ஆட்டமிழந்தார் என அஸ்வனி குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!

ஐபிஎல் 18ஆவது சீசனில் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை நேற்று (திங்கள்கிழமை) சாய்த்தது.முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவா்களில் 171/7 ... மேலும் பார்க்க

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வி... மேலும் பார்க்க

எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் பெங்களூரு- இன்று குஜராத்துடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 2) மோதுகின்றன.இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பெங்களூரு ‘ஹா... மேலும் பார்க்க

மூவா் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது. முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக... மேலும் பார்க்க

பூரண், பதோனி விளாசல்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னௌ அணி.முதலில் பேட் செய்த லக்னௌ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. லக்னௌ தரப்பில் அதிகபட்சமாக பூரண் 44, ப... மேலும் பார்க்க