செய்திகள் :

உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்: 3 மாதங்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

post image

ஹரியாணாவில் யோகா ஆசிரியர் ஒருவர் காணாமல் போனதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதுடைய ஜக்தீப், கல்வி நிறுவனம் ஒன்றில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார். வாடகை வீட்டில் வசித்துவந்த அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் சிவாஜி காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாருக்குப் பின் போலீஸாரின் விசாரணையில் சிசிடிவி காட்சிகளைத் துப்பு துலக்கியதில், ராஜ்கரன் என்பவரும் ஜக்தீப்புக்கும் இடையே நட்பு இருந்தது தெரியவந்தது.

முக்கிய குற்றவாளியான ராஜ்கரன் தலைமறைவானதையடுத்து, அவரது நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ராஜ்கரன் ஜக்தீப்புக்கு தனது மனைவியுடன் தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பிடிபட்ட ராஜ்கரனின் நண்பர்களை விசாரித்ததில் ஜக்தீப்பை கடத்தி, அவரது வாயில் டேப் போட்டு, கை, கால்களைக் கட்டி, ஒரு வெறிச்சோடிய வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், உயிருடன் குழியில் தள்ளிப் புதைத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். முக்கிய குற்றவாளியான ராஜ்கரனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஹரியாணா: தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத... மேலும் பார்க்க

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தைச் சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் அங்குள்ள மா... மேலும் பார்க்க

உ.பி.: கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கமலா ஷரன் யாதவ் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல்... மேலும் பார்க்க

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ... மேலும் பார்க்க

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள ... மேலும் பார்க்க