செய்திகள் :

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

post image

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு.க பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு கஞ்சா விற்பனையிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அசோக்கை கைது செய்ய போலீஸார் அவரைத் தேடிவந்தனர். அப்போது அவர் சிங்கபெருமாள் கோயில் அருகே ஆப்பூர் வனப்பகுதியில் தலைமறைவாக இருக்கும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர்.

துப்பாக்கிச் சூடு

ரௌடி அசோக்கை சுற்றி வளைத்த போலீஸார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸாரை வெட்டிவிட்டு அசோக் தப்பிக்க முயன்றார். அதனால் தனிப்படை போலீஸார் ரௌடி அசோக்கை சரண் அடையும்படி எச்சரித்தனர். ஆனால் அவர் சரண் அடையாமல் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். உடனே தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், தன்னுடைய துப்பாக்கியால் ரௌடி அசோக்கை நோக்கி சுட்டார். இதில் அவரின் இடது காலில் துப்பாக்கி குண்டு துளைத்தது. அதனால் ரத்த வெள்ளத்தில் அசோக் சுருண்டு கீழே விழுந்தார். உடனே அவரை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யார் இந்த ரௌடி அசோக் என தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம். ``ஏ பிளஸ் ரௌடியான அசோக் மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட 17 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் அசோக், நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்.

ரௌடி அசோக்

அதனால் இவரிடமிருந்துதான் சென்னை புறநகர் பகுதியில் உள்ள ரௌடிகள், நாட்டு வெடிகுண்டுகளை விலைக்கு வாங்கி வந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டுகளோடு பைக்கில் திருப்போரூர் பகுதியில் ரௌடி அசோக் கூட்டாளிகளுடன் சென்றார். அப்போது வேகத்தடையில் ஏறி இறங்கிய பைக்கிலிருந்த நாட்டு வெடிகுண்டுகள் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் ரௌடி அசோக்கின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது.

கொலை

2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் செங்கல்பட்டில் தினேஷ், பிஸ்கட் மொய்தீன், மாதவன் ஆகியோரை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்த சம்பவத்தில் ரௌடி அசோக்குக்கு தொடர்பு உள்ளது. இந்தச் சம்பவத்தை தன்னுடைய காதலி மூலம் கச்சிதமாக செய்து முடித்ததாக ரௌடி அசோக் மீது அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரௌடி அசோக்கை தற்போது காலில் சுட்டு பிடித்திருக்கிறோம்" என்றனர்.

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்... மேலும் பார்க்க

தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை

சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.உடனடியாக போலீஸார்... மேலும் பார்க்க

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்... மேலும் பார்க்க

வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை ... மேலும் பார்க்க

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க