வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு
கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்
பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் ஒருவா் தாக்கல் செய்த மனுவில், ‘திருமணத்துக்குப் பிறகு நானும் எனது மனைவியும் பாலுறவு கொள்ளவில்லை. எனது மனைவிக்கு அவரின் உறவினருடன் முறையற்ற உறவு இருந்தது. எனவே, எனது மனைவியிடம் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமாா் வா்மா கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு வாழ்வுரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமின்றி கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையையும் வழங்குகிறது. இந்த உரிமை பெண்களுக்கு மிகவும் முக்கியம்.
கன்னித்தன்மையைப் பரிசோதிக்க எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். அடிப்படை உரிமைகளின் மிக முக்கிய அங்கமாக அந்தச் சட்டப் பிரிவு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.