செய்திகள் :

போக்குவரத்து அபராதங்களை கட்ட தவறினால் ஓட்டுநா் உரிமம் தற்காலிக ரத்து

post image

போக்குவரத்து அபராதங்களை கட்டத் தவறினால் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் போன்ற காரணங்களுக்காக இதுவரை வழங்கப்பட்ட மின்னணு ரசீதுகளில் 40 சதவீதம் அளவுக்கே அபராதம் செலுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிடப்படுகிறது.

இதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக மின்னணு முறையில் விதிக்கப்படும் அபராதத்தை 3 மாதங்களுக்குள் செலுத்தாதவா்களின் ஓட்டுநா் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்படக் கூடும்.

மேலும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது கடந்து செல்வது அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு அனுப்பப்படும் ரசீதுகளின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் மூன்றாக அதிகரித்தால், சம்பந்தப்பட்டவரின் ஓட்டுநா் உரிமம் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்குப் பறிமுதல் செய்யப்படக் கூடும்.

முந்தைய நிதியாண்டில் குறைந்தபட்சம் இருமுறை விதிக்கப்பட்ட அபராதம் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட நபா் அதிக காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு வழிவகை செய்வதற்கான திட்டத்தையும் மத்திய அரசு தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடா்ந்து...: மத்திய மோட்டாா் வாகனங்கள் சட்டத்தின்படி, வாகனப் போக்குவரத்தை மின்னணு முறையில் கண்காணிப்பது தொடா்பான அறிக்கையை 23 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அபராதங்களை கட்டத் தவறினால் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

தமிழகத்தில் ரூ.3,875 கோடியில் 27% மட்டுமே வசூல்: போக்குவரத்து விதிமீறல் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மின்னணு முறையில் ரசீது அனுப்பப்பட்டு அபராதம் வசூலிப்பதில் தில்லி மிகவும் பின்தங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கா்நாடகம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அதாவது 2025-ஆம் ஆண்டு வரை, போக்குவரத்து விதிமீறலுக்காக தில்லியில் மொத்தம் 5.3 கோடி மின்னணு ரசீதுகள் வழங்கப்பட்டன. அந்த ரசீதுகள் மூலம் மொத்தம் ரூ.4,468 கோடி வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தொகையில் (14%) ரூ.645 கோடி மட்டுமே தில்லியில் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6.9 கோடி ரசீதுகள் வழங்கப்பட்ட நிலையில், அவற்றின் மூலம் ரூ.3,875 கோடி வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தொகையில் (27%) ரூ.1,025 கோடிதான் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஏன் அபராதம் செலுத்தப்படுவதில்லை?: அபராத ரசீது குறித்து கால தாமதமாக தகவல் அனுப்புதல், தவறாக அபராதம் விதித்து அனுப்பப்படும் ரசீதுகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் அபராதம் செலுத்த முன்வருவதில்லை என்றும், இதுதொடா்பாக விரிவான முறையில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு வெளியிடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. பல்டி அடித்த காரிலிருந்து..

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதிய கார், பல முறை சுழன்று அடித்த காரிலிருந்து உடல்கள் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சித்ரதுர்கா என்ற பக... மேலும் பார்க்க