தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்ஸ் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோக்கி சென்றுள்ளது. பின்னால் டூவிலரில் அந்த சிறுவன் சென்றுள்ளான்.
ஆம்புலன்ஸ் தஞ்சை அருகே உள்ள பட்டுக்கோட்டை பைபாஸ் பாலம் பகுதியை கடந்து சென்றது, சிறுவனும் பிந்தொடர்ந்து சென்றுள்ளான். அப்போது எதிரே ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர் சிறுவனை நிறுத்தியுள்ளனர்.

`பாக்கெட்டில் என்னடா வச்சிருக்க’னு கேட்டவர்கள் திடீரென கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். அப்போது அந்த சிறுவன், எங்கிட்ட பணம் எதுவும் இல்லை, அப்பாவுக்கு உடம்பு சரியில்லைண்ணா, ஆம்புலன்ஸில் போய் கொண்டு இருக்கார். நான் மெடிக்கலுக்கு போகணும் என்னை விடுங்கண்ணா ப்ளீஸ்னு கெஞ்சியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் சிறுவனிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு சென்று விட்டனர்.
இதனால் தவித்து நின்ற அந்த சிறுவன், இது குறித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், சிறுவனை மிரட்டி செல்போன் பறித்த தஞ்சை விளார் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்த நந்தகுமார் (25), முருகன் (37), சுதாகர் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். செலவுக்கு எங்ககிட்ட பணம் இல்லை. அதனால் சிறுவன் சொன்ன எதையும் கேட்காமல் செல்போனை பறித்து சென்றோம் என போலீஸிடம் அந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs