செய்திகள் :

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

post image

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.

அக்கொலையில் சமந்தப்பட்டதாக சொல்லப்பட்ட சுபாஷ் சந்திரபோஸை தேடிச்சென்றபோது, அவர் போலீஸாரை தாக்க, பதிலுக்கு போலீஸாரால் சுடப்பட்டதில் காயமடைந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்கவுன்ட்டர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், "ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டரத்தை பூர்வீகமாகக்கொண்டு மதுரைக்கு இடம்பெயர்ந்து திமுகவில் மாநகராட்சி மண்டலத் தலைவராகவும், கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் செல்வாக்குடன் இருந்த வி.கே.குருசாமிக்கும், அதேபோல் மாநகராட்சி மண்டலத்தலைவராக அதிமுக-வில் செல்வாக்குடன் இருந்த ராஜபாண்டி தரப்புக்கும் இடையே தனிப்பட்ட பகை பெரிதாக வளர்ந்து அடிக்கடி மோதல் ஏற்பட்டு கடந்த 22 ஆண்டுகளில் மாறி மாறி பழிக்குப் பழியாக 22 கொலைகள் நடந்துள்ளது.

ராஜபாண்டி மறைவிற்குப் பிறகு பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் அவருடைய உறவினர் வெள்ளைக் காளி வி.கே. குருசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

சுட்டுக்கொலை

இந்த நிலையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் வெள்ளைக் காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அக்கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் பிடிக்க விளாச்சேரிப் பகுதியில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது காரில் வந்த சுபாஷ் சந்திரபோஸ் கத்தியை எடுத்து வெட்டியதில் இரண்டு போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.

சரணடையும்படி இன்ஸ்பெக்டர பூமிநாதன் துப்பாக்கியை காட்டியபோது, சுபாஷ் சந்திரபோஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டதில் குறி தவறியுள்ளது. அதனால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் திருப்பி சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் மார்பில் குண்டு பட்டு அங்கேயே இறந்தார்.

என்கவுன்ட்டர் நடந்த இடத்தில்

இந்த சம்பவம் மதுரையில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வி.கே.குருசாமிக்கு ஸ்கெட்ச் போட்ட வெள்ளைக்காளியின் ஆட்கள் மதுரை கூடல் நகரில் தங்கியிருந்தபோது போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மூன்றாவது என்கவுன்ட்டராக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி - புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்... மேலும் பார்க்க

`யாரு முக்கியம்?' - பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த ஆண் நண்பர்; 2 குழந்தைகள் தவிப்பு

சென்னை பல்லாவரம் அருகே வசித்து வந்தவர் ஜோதி ( 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை செ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க