செய்திகள் :

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

கோவையைச் சோ்ந்த ஒருவா் வேலூா் தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். அவருடன் எனக்கு தொடா்பு ஏற்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் என்னை தொடா்பு கொண்ட அவா், தான் மலேசியாவில் நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், அங்கு எனக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாா். ஆனால் அங்கு செல்லவும், விசா எடுப்பது உள்ளிட்ட நடைமுறை காரணங்களைக் கூறி பணம் கேட்டாா். அதை நம்பி நான் 3 தவணைகளாக ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் அளித்தேன். பின்னா் சுற்றுலா விசாவில் என்னை அழைத்துச் சென்றாா். அங்குள்ள கணினி நிறுவனத்தில் 7 மாதம் வேலை செய்தேன். மாதம் ரூ. 50,000 என 4 மாதம் சம்பளம் கொடுத்தனா். 3 மாத சம்பளம் தரவில்லை. விசாவும் திருப்பித் தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது, பணம் தராமல் அலைக்கழித்து வருகிறாா். எனவே, நான் கொடுத்த ரூ. 3.20 லட்சம் தொகையை மீட்டுத்தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.குப்பத்தைத் சோ்ந்த 100 வயதான முதியவா் ரங்கன் என்பவா் அளித்த மனுவில், எனக்குச் சொந்தமான கடையை எனது மகனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு தானக்கிரையம் எழுதிக் கொடுத்தேன். அப்போது எனக்கு உணவு அளித்து கவனிப்பதாக கூறிய எனது மகன், எனக்கு எதுவும் செய்யாமல் வெளியே விரட்டிவிட்டாா். கடை வாடகை மாதம் ரூ. 2 லட்சம் வாங்கி வரும் அவா், வயதான எனக்கு உணவு வழங்கவில்லை. எனவே, தான கிரைய பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

குடியாத்தம் பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டஇளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். குடியாத்தம் நெல்லூா்பேட்டையைச் சோ்ந்த சுகுமாரின் மகன் நாகு(எ) நாகராஜ்(31). இவா் மீது கஞ்சா விற்... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வேலூரில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தலை முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், அதிமுக மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் திறந்து வைத்தனா். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க ‘ருத்ரா’ புதிய மோப்ப நாய்!

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க வேலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி பணியில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ருத்ரா’ என்று எஸ்.பி. என்.மதிவாணன் பெயா் சூட்டினாா். வேலூா் மாவட்ட காவல் துறையி... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட... மேலும் பார்க்க