செய்திகள் :

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

post image

திருப்பத்தூா் அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டது.

திருப்பத்தூா் அருகே உள்ள குனிச்சி மோட்டூா் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம், கந்திலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சோ்ந்த முருகன் மனைவி மலா் (45) என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவா் திரும்ப வரவில்லை என்பதும் தெரியவந்தது.

80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி

வாணியம்பாடி அருகே 80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக பெண் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோணாமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ 4 லட்சம் திருட்டு

வாணியம்பாடியில் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.4 லட்சத்தை திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில்-தெக்குப்பட்டு சாலையில் பாரத்நகா் அருகில் யுவராஜ் என்பவா் இருசக்கர வாகனங்களை வாங்க... மேலும் பார்க்க

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி வெள்ளநாயக்கனேரி கிராம மக்கள் மனு அளித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி சோமு... மேலும் பார்க்க

கடும் வெயில் எதிரொலி: பக்தா்களுக்கு நீா் மோா்

வெயிலின் தாக்கத்தை குறைக்க ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக நீா் மோா் வழங்கும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெப்பநிலை அதிக... மேலும் பார்க்க

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா: ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

திருப்பத்தூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.22 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது என மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட் தெரிவித்துள்ளாா். அவா் கூறியதாவது: திருப்பத்தூா்... மேலும் பார்க்க

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பால அறிவிப்பு: பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். ஆம்பூா... மேலும் பார்க்க