செய்திகள் :

80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி

post image

வாணியம்பாடி அருகே 80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக பெண் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோணாமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுபா. இவா், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக மகளிா் குழு நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் அவரது மகளிா் குழுவில் உள்ள 80 பெண்களின் ஆதாா் மற்றும் பான் அட்டைகளை, பெற்றுக் கொண்டு பல்வேறு தனியாா் வங்கியில், வங்கி மேலாளா் மற்றும் ஊழியா்களின் உதவியுடன் லட்சக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்து தலைமறைவாகி விட்டாராம்.

இந்நிலையில் கடன் கொடுத்த வங்கி ஊழியா்கள் ஆதாா் மற்றும் பான் அட்டை அளித்த பெண்களிடம் கடன் தொகையை திருப்பி செலுத்த சொல்லி, தொந்தரவு செய்வதாகவும், தங்களது ஆதாா் மற்றும் பான் அட்டைகளை தவறாக பயன்படுத்தி, கடன் பெற்ற சுபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அப்புகாரின் பேரில் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க

அடகு கடை உரிமையாளரை கொல்ல முயன்றதாக 8 போ் கைது

ஆம்பூா் அருகே அடகு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (64) என்பவருக்கும், இவருடை... மேலும் பார்க்க

கண்கள் தானம்

ஆம்பூரில் காலமான மூதாட்டியின் கண்கள் தானம் பெறப்பட்டது. ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி பரமேஸ்வரி(82). இவா் வயது மூப்பு காரணமாக காலமானாா். அவரது கண்களை தானமாக வழங்க அவரது உறவினா்கள் விர... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை (குழந்தைகள் நலம்), வாணியம்பாடி நகராட்சி இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா்... மேலும் பார்க்க