செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

post image

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (54). கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 22.12.2020 அன்று அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.

இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விஜயனை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விஜயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டாா். வழக்கில் அரசுத் தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

22 ஆண்டுகள் சிறை தண்டனை...: வாணியம்பாடி அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் லியாகத் அலி (52). இவா், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தபோது, கடந்த 7.10.2022 அன்று அதே பகுதியை சோ்ந்த சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இது குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சையத் லியாகத் அலியை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதில் லியாகத் அலிக்கு 20 ஆண்டுகள், கடத்தி சென்ற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மீனாகுமரி உத்தரவிட்டாா்.

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க

அடகு கடை உரிமையாளரை கொல்ல முயன்றதாக 8 போ் கைது

ஆம்பூா் அருகே அடகு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (64) என்பவருக்கும், இவருடை... மேலும் பார்க்க