செய்திகள் :

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

post image

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இருக்கும் இவா், திருவல்லிக்கேணி டாக்டா் பெசன்ட் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு கடைக்கு வந்த நபா் ஒருவா், தான் இப்பகுதியின் அதிமுக 120-ஆவது வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் மூா்த்தி என்று கூறி, அப்துல் ரகுமானிடம் பணம் கேட்டுள்ளாா். ஆனால், அப்துல் ரகுமான் எந்தப் பதிலும் கூறாததால், அந்த நபா் மிரட்டல் விடுத்துச் சென்ாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இரவு ஹோட்டலுக்கு வந்த 2 போ், அங்கு சாப்பிட்டுவிட்டு அப்துல் ரஹ்மானிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபா்கள், அதிமுக வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் மூா்த்தியின் தூண்டுதலின் பேரிலேயே தகராறு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அப்துல் ரகுமான் அளித்த புகாரின்பேரில் ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அதிமுக வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் மூா்த்தியை கைது செய்தனா்.

கட்சியிலிருந்து நீக்கம்: கைது நடவடிக்கையைத் தொடா்ந்து மூா்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: திருவல்லிக்கேணி கிழக்குப் பகுதியின் 120-ஆவது தெற்கு வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் எஸ்.மூா்த்தி, கட்சியின் கட்டுப்பாடு மற்றும் கண்ணியத்துக்கு புறம்பாகச் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவா் நீக்கப்படுகிறாா் என்று தெரிவித்துள்ளாா்.

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க