செய்திகள் :

ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!

post image

ரசிகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை தாக்க முயன்ற பாகிஸ்தான் வீரரை பாதுகாவலர் தரதரவென இழுத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில், இரு தொடர்களையும் பாகிஸ்தான் அணி இழந்தது.

மௌண்ட் மாங்கனுவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்தது. இதனால், ஆத்திரமடைந்த வெளிநாட்டு ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்தனர். அவர்களுக்கு எதிராக தேவையற்ற வார்த்தைகளால் கோஷமிட்டனர்.

இதனால், கோபமடைந்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் குஷ்தில் ஷா, அந்த ரசிகர்களை நோக்கி அடிக்கப் பாய்ந்து பவுண்டரி தடுப்பைத் தாண்டினார். மேலும், ரசிகர்களையும் தாக்க முயன்றார்.

இதனைப் பார்த்த பாதுகாவலர்கள் அவரைத் தரதரவென இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேற்றினர். மற்ற பாதுகாவலர்களும் அந்த ரசிகர்களையும் அங்கிருந்து வெளியேற்றினர். போட்டியைக் காண வந்த ரசிகர்களை வீரர் ஒருவர் தாக்க முயன்றய சம்பவம் கடும் அதிர்வலைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர்கள் குஷ்தில் ஷாவை நோக்கி தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். எங்கள் நாட்டு வீரர் மீது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, முதல் டி20 போட்டியின்போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் சாக் பௌல்க்ஸ் தோள்பட்டையின் மீது குஷ்தில் ஷா தேவையின்றி மோதினார். இதனால், அவருக்குப் போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

காயத்திலிருந்து குணமடைந்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள்!

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார்கள்.பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயூப் இருவரும் க... மேலும் பார்க்க

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ஹாரி புரூக்!

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததே அந்த அணி சர்வதேசப் போட்டிகளில் சரியாக செயல்படாததற்கு முக்கிய காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் கடந்த ... மேலும் பார்க்க

இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக டி2... மேலும் பார்க்க

மும்பையை வென்றது லக்னௌ

ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகுகிறாரா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆலி ஸ்டோன் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர... மேலும் பார்க்க