செய்திகள் :

இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

post image

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக அண்மையில் தெரிவித்தது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?

வாசிம் ஜாஃபர் கூறியதென்ன?

உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக ஜெய்ஸ்வால் எடுத்துள்ள முடிவு ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கோவா அணியில் எந்த பொறுப்பு அளிக்க முன்வந்தாலும், மும்பை அணியை விட்டு ஜெய்ஸ்வால் விலகக் கூடாது. அதுவும் குறிப்பாக, இந்த இளம் வயதில் (23 வயது) அவர் அணியை விட்டு விலகுவது சரியான முடிவு கிடையாது. 34-35 வயதில் ஒருவர் இந்த முடிவை எடுத்தால் அதில் பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை. மும்பை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறேன். ஆனால், மும்பை அணியை விட்டு விலகுவது என்ற அவரது முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிக்க: சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும்; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சந்தீப் சர்மா பாராட்டு!

மும்பை அணிக்காக 14 வயதுக்கு முன்பிலிருந்து தற்போது வரை விளையாடியுள்ள ஒருவர் இந்த முடிவை எடுத்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. மிக விரைவில் இந்த முடிவை அவர் எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். அவர் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதை இலக்காக வைத்துக்கொள்ளக் கூடாது. இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே அவருடைய இலக்காக இருக்க வேண்டும் என்றார்.

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ஹாரி புரூக்!

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததே அந்த அணி சர்வதேசப் போட்டிகளில் சரியாக செயல்படாததற்கு முக்கிய காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் கடந்த ... மேலும் பார்க்க

மும்பையை வென்றது லக்னௌ

ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகுகிறாரா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆலி ஸ்டோன் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர... மேலும் பார்க்க

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், சாம்பியன்ஸ் டிராபி... மேலும் பார்க்க

நியூசி. ஒருநாள் தொடர்: மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம்!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 84 ... மேலும் பார்க்க