செய்திகள் :

மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான்: 3-வது போட்டிக்கும் அபராதம்!

post image

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்லோ-ஓவர் ரேட்டில் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் மௌண்ட் மாங்கனுவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் வழக்கமான நேரத்தைவிட பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் மெதுவாக பந்து வீசியதற்காக, அந்த அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக எலைட் பேனல் நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்தார்.

ஐசிசி சட்டவிதி 2.22-ன் படி மெதுவாக பந்துவீசும் அணிக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். களநடுவர்கள் கிறிஸ் பிரவுன் மற்றும் பால் ரீஃபல் இருவரும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வான் இதை ஒப்புக்கொண்டார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பும்ரா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும... மேலும் பார்க்க

ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முற... மேலும் பார்க்க

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் வ... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக 4 தோல்விகள்; சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பயிற்சியாளர் கூறுவதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு... மேலும் பார்க்க

ஐபிஎல்: நேற்று சென்னை.. இன்று ஹைதராபாத்! 4-ஆவது தோல்வி!

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 153 ரன்கள் வெற்றி இலக்கை குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.4 ... மேலும் பார்க்க

முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ... மேலும் பார்க்க