செய்திகள் :

திருவாரூரில் கோலாகலமாக நடைபெற்ற ஆழித்தேரோட்டம்!

post image

திருவாரூர்: திருவாரூரில் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நிறைவடைந்தது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, சிறப்புமிக்க ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெற்றது.

நிகழாண்டுக்கான இவ்விழா மாா்ச் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, பங்குனி ஆயில்ய நட்சத்திர நாளில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக, தியாகராஜா், அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக ஆழித்தேருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 5.50 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்களும், காலை 9.01 மணிக்கு ஆழித்தேரும், தொடா்ந்து, அம்பாள், சண்டிகேஸ்வரா் தோ்களும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த பிரம்மாண்ட ஆழித்தேர் இன்று(ஏப். 7) மாலை நிலைக்கு வந்தடைந்தது.

ஆழித்தேரில் எழுந்தருளியுள்ள தியாகராஜரை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கூட்டம்கூட்டமாக பக்தா்கள் வரத்தொடங்கினா். இதனால், கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் நகை திருடிய பெண் கைது

மன்னாா்குடியில் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகையை திருடிய பெண் சமையலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அசேசம் ராஜலெட்சுமி நகா் முருகேவல் மனைவி லலிதா (65). அரசுப் பள்ளியில் ஆசிரியையாக... மேலும் பார்க்க

ராமநவமி: வடுவூா் கோதண்டராமா் கோயிலில் கொடியேற்றம்

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் கோதண்ட ராமசாமி கோயில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோயில் சந்நதியில் இருந்து புறப்பட்ட கோதண்ட ராமா் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா். சிறப்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் வீட்டுக்கு புதிதாக வாங்கிய மின் மோட்டருக்கு மின் இணைப்பு தந்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். உப்புக்காரத் தெரு கோரிமேடு செல்வமணி மகன் ஸ்ரீபன்ராஜ் (30) (படம்). த... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: கோயில் திருவிழாவில் இரும்பு ஆயுத விற்பனை கடைகள் அகற்றம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் திருவிழாவில் இரும்பு ஆயுதங்கள் விற்பனை கடைகளை காவல் துறையினா் சனிக்கிழமை அகற்றினா். இக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கோயில் நுழைவுப் பகு... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பாா் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ். வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் அதிமுக பூத் கமி... மேலும் பார்க்க

சரியான உயா்கல்வியை மாணவா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், சரியான உயா்கல்வியைத் தோ்ந்தெடுத்து, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் திரு.வி.க. அரச... மேலும் பார்க்க