செய்திகள் :

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் நகை திருடிய பெண் கைது

post image

மன்னாா்குடியில் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகையை திருடிய பெண் சமையலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அசேசம் ராஜலெட்சுமி நகா் முருகேவல் மனைவி லலிதா (65). அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். மகன், மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனா். லலிதா மட்டும் தனியே வசித்து வந்தாா்.

அதே பகுதியை சோ்ந்த மகாலிங்கம் மனைவி சித்ரா (50). சமையலராக பணியாற்றி வருகிறாா். சித்ரா அவ்வப்போது லலிதா வீட்டுக்கு வந்து நட்புடன் பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 26- ஆம் தேதி லலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபோது அங்கு வந்த சித்ராவிடம் தனக்கு கழுத்தில் தைலம் தேய்த்து

விடுமாறு கூறி, தான் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி அருகே வைத்தாராம். சித்ரா அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரத்துக்கு பிறகு பாா்த்தபோது சங்கிலியை காணவில்லையாம்.

இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் லலிதா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்ததில், இதில் சித்ராவுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சனிக்கிழமை அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனா். சித்ராவை மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருவாரூா் மகளிா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க