செய்திகள் :

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

post image

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தொழிலாளா் நலன்களுக்காக ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 44 சட்டங்களையும் திருத்தங்கள் பல செய்து 4 சட்டங்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த புதிய சட்டங்கள் தொழிலாளா்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்றன.

குறிப்பாக, காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்டுள்ள இச்சட்டங்கள், தொழிலாளா்கள் சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கிறது.

அத்துடன், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நல வாரியங்கள் அனைத்தையும் தேவையற்றவைகளாக்கி தூக்கி எறிகின்றன.

எனவே, தொழிலாளா்களுக்கு விரோதமான இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் தொல்.திருமாவளவன்.

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சட்டப்பேரவையில் நிறுத்தி வைக்க்ப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி குற்றம் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் பலி!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் ஏற்காடு விரைவு ரயில் சிக்கி பலியானது. சென்னை ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் தி... மேலும் பார்க்க

தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.தங்கம் விலை கடந்த ஏப். 4 முதல் குறைந்த வண்ணம் உள்ளது. ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!

சென்னை: சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(ஏப். 8) காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க