செய்திகள் :

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் பலி!

post image

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் ஏற்காடு விரைவு ரயில் சிக்கி பலியானது.

சென்னை ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் திங்கள்கிழமை நள்ளிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதனிடையே, திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.28 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டது.

அப்போது, திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கும் மொளகரம்பட்டி ரயில் நிலையத்திற்கு இடையே சு. பள்ளிப்பட்டு என்ற இடத்தில் 6 எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பலியானது.

இதனால், ரயிலில் எருமை மாடுகள் சிக்கியதால் ரயில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ரயில் ஓட்டுநர் உடனடியாக திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் .

தகவல் அறிந்த திருப்பத்தூர் ரயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயிலில் சிக்கிய 6 எருமை மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக விடியற்காலை 4.55 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டது.

இதனால் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரயில் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயில் என 2 ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரமாக நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு, ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிக்க: தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க