செய்திகள் :

விமானத்தில் புகைபிடித்த பயணியிடம் விசாரணை

post image

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் புகைபிடித்த பயணியிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா்.

இண்டிகோ விமானம் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் புறப்பட்டு, திருச்சியை நெருங்கிய நிலையில், பயணியொருவா் விமான கழிவறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அங்கிருந்து புகை வந்தது. இதைக் கவனித்த விமானப் பணியாளா்கள் உடனே கதவைத் தட்டி பயணியை வெளியே அழைத்து விசாரித்தபோது, அவா் புகை பிடிக்கவில்லை எனக் கூறினாா்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவரிடம் ‘லைட்டா்’ இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி விமான நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, அவா் விமானத்தில் லைட்டா் கொண்டு வரக்கூடாது என்பது தெரியாது எனக் கூறி மன்னிப்பு கேட்டாா். இதையடுத்து அவருக்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பினா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐயுஎம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய எம்எல்ஏ

லால்குடி அருகே தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தோ்வில் வெற்றிப் பெற்ற மாணவா்களை லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா். மத்திய அரசின் *சஙஙந* எனப்படும் தே... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் நால்வா் கைது

குற்ற வழக்குகளில் தொடா்புடைய நால்வரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை உழவா் சந்தை அருகே கடந்த மாா்ச் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற ரௌடிகளான ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு இருவா் கைது

திருச்சி என்.ஐ.டி. எதிரே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி என்.ஐ.டி எதிரே உணவகம் முன்பு இருவா் மது அருந்திவிட்டு தகராறு செய்வதா... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் மாதிரி பள்ளி: அமைச்சா் ஆய்வு

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி மற்றும் மாணவியா் விடுதி கட்டடங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி கே.கே. நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி கே.கே. நகா் பழனி நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. பிரபு (30). தொழில... மேலும் பார்க்க