செய்திகள் :

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

post image

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், அரசு அதிகாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசும் கல்யாணசுந்தரம்

இதில் அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் பயனாளிகளுக்குக் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணையை வழங்கினர்.

இதில் தி.மு.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், ராஜய்சபா எம்.பி-யுமான கல்யாணசுந்தரம் பேசுகையில், "அரசு எவ்வித திட்டம் போட்டாலும், அரசுக்கு நற்பெயரை வாங்கிக்கொடுப்பது அரசு அதிகாரிகள்தான்.

கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெரியவர் ஒருவர், கும்பகோணத்தில் முறையான குடிநீர் இல்லை, சாலை வசதி இல்லை, தெரு விளக்கு இல்லை எனச் சண்டை போட்டார்.

எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதத்திற்குப் பிறகுதான் குழந்தை பிறக்கும்.

திருமணத்திற்கு முன்பே, திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத்தான் பிறக்கும்.

முன் கூட்டியே காதல் செய்து, கர்ப்பமானால் திருமணம் ஆகும் அன்றே குழந்தை பிறக்கும்‌. எனவே, வருபவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பேசுவதால், கோபப்பட்டுப் பேசுவதால், திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும்.

அவர்களிடம் அனுசரித்து, 'வேலை எல்லாம் செய்து கொடுங்கள்'னு கேட்கனுமே தவிர, விதண்டாவாதமாகப் பேசக்கூடாது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன், கல்யாணசுந்தரம்

உங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் எனச் சட்டம் இல்லை. உங்களின் தேவைகளை அறிந்து கடமையைச் செய்ய வந்துள்ளோம்" என்றார்.

இப்படி கல்யாணசுந்தரம் சர்ச்சையாகப் பேசிக்கொண்டிருக்கச் சட்டென முகம் சுழித்த அமைச்சர் கோவி.செழியன், புத்தகம் ஒன்றை எடுத்துப் படிப்பது போல் முகத்தை மறைத்துக் கொண்டார்.

எம்.எல்.ஏ அன்பழகன் தலையில் கை வைத்துக் கொண்டார். சீனியரான கல்யாணசுந்தரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்வதாக அங்கிருந்தவர்கள் புலம்பினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம்கோர்ட் போட்ட தடை;என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக... மேலும் பார்க்க

Article 142 : `ஜக்தீப் தன்கரை நீக்க MP-க்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ - பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஆளுநர் ஆர்.என். ரவிக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142-ஐப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.அத... மேலும் பார்க்க

TVK : 'இந்தியாவுலயே பெரிய படை நம்மளோடதுதான்!' - ஐ.டி விங் கூட்டத்தில் விஜய் பேச்சு

'தவெக ஐ.டி விங்!'தவெகவின் ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மு... மேலும் பார்க்க

Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகள் வக்... மேலும் பார்க்க

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்..." - மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிர... மேலும் பார்க்க