செய்திகள் :

TVK : 'இந்தியாவுலயே பெரிய படை நம்மளோடதுதான்!' - ஐ.டி விங் கூட்டத்தில் விஜய் பேச்சு

post image

'தவெக ஐ.டி விங்!'

தவெகவின் ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ மூலம் தோன்றி நிர்வாகிகளுக்கு முக்கிய மெசேஜை கூறியிருக்கிறார்.

தவெக ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம்
தவெக ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம்

'விஜய்யின் வீடியோ மெசேஜ்!'

விஜய் பேசியிருப்பதாவது, 'எல்லாருக்கும் ஹாய், இந்த மீட்டிங் நடக்கும்போதே லைவ்வா வீடியோ கால்ல வந்து பேசணும்னு நினைச்சேன். நெட்வொர்க் பிரச்னையினால அதை செய்ய முடியல. அதனாலதான் இந்த ரெக்கார்டட் மெசேஜ்.

மெய்நிகர் படை வீரர்கள்

நம்முடைய சோசியல் மீடியா படைதான் இந்தியாவிலேயே பெரிய படைன்னு சொல்றாங்க. அதை நாமலே சொல்றத விட அவங்களே பார்த்து தெரிஞ்சுக்கணும். என்னைப் பொறுத்தவரை நீங்களெல்லாம் சோசியல் மீடியால இயங்குற ரசிகர்கள் இல்லை.

தவெக ஐ.டி விங் கூட்டத்தில் வீடியோ வழி பேசிய விஜய்
தவெக ஐ.டி விங் கூட்டத்தில் வீடியோ வழி பேசிய விஜய்

மெய்நிகர் படை வீரர்கள் (Virtual Warriors) நம்முடைய ஐ.டி விங் என்றாலே கண்ணியமாக செயல்படக்கூடியவர்கள் என்ற பெயரை எடுக்க வேண்டும். விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம்.' என்றார்.

இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம்கோர்ட் போட்ட தடை;என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக... மேலும் பார்க்க

Article 142 : `ஜக்தீப் தன்கரை நீக்க MP-க்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ - பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஆளுநர் ஆர்.என். ரவிக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142-ஐப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.அத... மேலும் பார்க்க

Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகள் வக்... மேலும் பார்க்க

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்..." - மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிர... மேலும் பார்க்க