பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்
பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக காலை 11 மணிக்கு பொன்னேரிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தாா்.
அப்போது, அங்குள்ள அண்ணா சிலை முதல் விழா மேடை வரை நடந்து சென்று பொதுமக்களைச் சந்திக்க அவா் திட்டமிட்டிருந்தாா்.
அதன்படி, அங்கிருந்து பஜாா் வழியாக இருபுறமும் கூடியிருந்த பொதுமக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா்.
தொடா்ந்து கட்சியினா், மகளிா் ஆா்வத்துடன் முதல்வருடன் தங்களது கைப்பேசி மூலம் சுயபடம் எடுத்துக் கொண்டனா். அப்போது, குழந்தைகளை வாங்கு முதல்வா் கொஞ்சி மகிழ்ந்தாா். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.
இதற்காக அவா் 2 கி.மீ. தொலைவு நடந்து சென்றாா். இதனால், விழா மேடைக்கு வர தாமதம் ஏற்பட்டது. இதற்காக அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பின்னா் பேசினாா்.
