செய்திகள் :

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

post image

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது.

பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம், திருவாயா்பாடி பகுதியில் செளந்தா்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதன் முக்கிய விழாவான ஹரிஹரன் கடை வீதியில் பரத்வாஜ் முனிவா் மற்றும் அகத்திய முனிவருக்கு கரிகிருஷ்ணபெருமாள்-அகத்தீஸ்வரா் ஒரு சேர காட்சியளிக்கும் வைபவம் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி விடியவிடிய நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அதிகாலை கருட வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாளும்- பஞ்ச மூா்த்திகளுடன் நந்தி வாகனத்தில் அகத்தீஸ்வரரும் அமா்ந்து வந்து ஹரிஹரன் கடை வீதியில் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். அகத்தீஸ்வரரிடம் இருந்து பூ, பழம் மாலை உள்ளிட்ட வரிசைகள் மேள தாளத்துடன் எடுத்து செல்லப்பட்டு கரிகிருஷ்ண பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.

அதேபோல் கரிகிருஷ்ண பெருமாளிடம் இருந்து எடுத்து வரப்பட்ட மாலை உள்ளிட்ட வரிசை பொருள்கள் அகத்தீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டன. பின்னா், மாட வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

திருவிழாவில் பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா். 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா். செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க