செய்திகள் :

மார்ச்சில் புதிதாக 4,440 5ஜி நிலையங்கள்!

post image

நாட்டில் மார்ச் மாதத்தில் மட்டும் கூடுதலாக 4,440 5ஜி இணைய சேவைக்கான நிலையங்கள் (கோபுரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் புதிதாக 5ஜி இணைய சேவை வழங்குவதை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்பக்கட்டத்தில் மும்பையில் முழுவதுமாக 5ஜி நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று, முழு வீச்சில் 5ஜி சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது.

இதோடு மட்டுமின்றி 11 கிரிக்கெட் விளையாட்டுத் திடல்களிலும் 5ஜி நிலையங்களை அமைத்து இணைய சேவையை வழங்குகிறது.

மும்பையைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் 5ஜி இணைய சேவையை வழங்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஏற்கெனவே கோலோச்சிவரும் ஏர்டெல்லும், ரிலையன்ஸ் ஜியோவும் 5ஜி இணைய சேவையை பரவலாக்கி வருகின்றன. குறிப்பாக பயனர்களின் இணைய பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், உள்புற 5ஜி நிலையங்களை அமைத்து வருகிறது.

செல்போன் கோபுரங்களை அமைத்துவரும், இந்தஸ் டவர் நிறுவனமும் உள்புற 5ஜி கோபுரங்களை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது,

இதனிடையே கடந்த மார்ச் மாத்தில் மட்டும் 4,440 5ஜி நிலையங்கள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 48,988 5ஜி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 30,999, கர்நாடகத்தில் 31,454 கோபுரங்கள், ராஜஸ்தானில் 28,056, பிகாரில் 24,289, ஹரியாணாவில் 17,440, தில்லியில் 12,334, ஒடிஸாவில் 12,939 5ஜி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில்... மேலும் பார்க்க

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

2,850 கோடி டாலராகக் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன... மேலும் பார்க்க

நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!

டோக்கியோ: நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். நிஸ்ஸானி... மேலும் பார்க்க