செய்திகள் :

'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ

post image

நேற்று மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருந்தார்.

இதற்கு மதிமுகவின் பொது செயலாளர் மல்லை சத்யா உடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடந்த மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவிற்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார் துரை வைகோ.

இது இயற்கை தான்

இதுக்குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ, "ஜனநாயக இயக்கங்களில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். சில நேரங்களில், அதன் நிர்வாகிகள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுவது இயற்கை தான். இது அனைத்து இயக்கங்களிலும் இருக்கும்.

இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், மனம் விட்டு அனைத்து நிர்வாகிகளும் பேசினார்கள். இறுதியாக இயக்க நலன், இயக்கத்தின் தந்தை நலன் தான் முக்கியம். இயக்கம் கட்டுக்கோப்பாக இருக்கிறது.

துரை வைகோ - வைகோ - மல்லை சத்யா |மதிமுக நிர்வாக கூட்டம்
துரை வைகோ - வைகோ - மல்லை சத்யா |மதிமுக நிர்வாக கூட்டம்

அவர் கொடுத்த வாக்குறுதி...

தமிழ்நாட்டின் நலனுக்காக இன்றளவும் போராடி வரும் இயக்கம் மதிமுக. இந்த இயக்கத்தோட பயணம் இன்னும் சீரும், சிறப்புமாக தொடர வேண்டும் என்பதால் நாங்கள் பேசினோம்.

சகோதரர் மல்லை சத்யா மீது நான் முதற்கொண்டு பலர் குற்றசாட்டுகளை முன்வைத்தப்போது, அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இனிமேல், எனக்கும், இயக்கத்திற்கும், இயக்கத்தின் தலைவருக்கும் பக்க பலமாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

நானும்...

அதை ஏற்றுக்கொன்டு என் பதவியில் தான் தொடர்கிறேன் என்று கூறியுள்ளேன். இந்த இயக்கத்திற்காக பாடுபடுபவர்களை தலை மேல் வைத்து கொண்டாட தயார் என்று பல முறை கூறியுள்ளேன்.

சகோதரர் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்க்கைக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்.

இதுவரை நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனிமேல் நடப்பது நன்மையானதாக இருக்கும் என்பதை இயக்கத் தந்தை கூறியதுப்போல நானும் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க