செய்திகள் :

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!

post image

அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதாரம், வா்த்தகம், பிராந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து வான்ஸ் விவாதிப்பாா்.

நாளை தில்லி வந்தடையும் அவர், இந்தியாவில் கலாசார பெருமைமிக்க இடங்களுக்கு சென்று பாா்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவரது பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென் மாநிலங்களுக்கு அவர் வருகை தரப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

துணை அதிபரின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். உஷாவின் பெற்றோர் 1970-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்துவிட்டனா். பாரம்பரியமாக கல்வியில் சிறந்து விளங்கி வரும் குடும்பத்தை சார்ந்தவர் உஷா. உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், துணை அதிபரின் மனைவி என்ற கௌரவத்துடன் உஷா சிலுகுரி வான்ஸ் தனது பூா்விகமான இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறாா். இந்தநிலையில், அவர்கள் தென் மாநிலங்களுக்கு வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தில்லி வந்தடையும் வான்ஸ் மற்றும் குடும்பத்தார், அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்குகிறார்கள். அங்குள்ள பாரம்பரியமிக்க தலங்களை பார்வையிடும் அவர்கள், அன்றிரவு பிரதமர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார்கள். அதன்பின், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்கிறார்கள். அங்கு பாரம்பரியமிக்க ராம்பாக் அரண்மனையில் தங்குகிறார்கள்.

அடுத்தநாள், அதாவது செவ்வாய்க்கிழமை அவர்கள் ஜெய்ப்பூரிலுள்ள பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்கள். அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் சர்வதேச அரங்கத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் வான்ஸ். அதற்கடுத்த நாளான புதன்கிழமை, தாஜ் மஹாலை பார்வையிடும் அவர்கள், மாலை ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள். அதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை ஜெய்ப்பூரிலிருந்து அவர்கள் அமெரிக்கா புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க

ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாகச் சந்தித்தார். வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய... மேலும் பார்க்க

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். 3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் ச... மேலும் பார்க்க

போரிட்டால்தான் அச்சுறுத்தல் இருக்காது: இஸ்ரேல் பிரதமர்

காஸாவில் போரிடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனிடையே, தங்களு... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதிய... மேலும் பார்க்க

அமெரிக்க - ஈரான் அணுசக்திப் பேச்சு: சவால்களும், சங்கடங்களும்...

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது. ஓமனை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு... மேலும் பார்க்க