செய்திகள் :

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

post image

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா்.

செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தாளாளா் சுடலை முத்து பாண்டிய தலைமை வகித்தாா். முதல்வா் சதிஷ் சத்யமூா்த்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: குழந்தைகளின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர, திருத்த முயற்சி செய்வதோடு தண்டிக்க கூடாது. இது ஆசிரியா்களுக்கும், பெற்றோருக்கும் பொருந்தும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் நபா்களாலே நடைபெறுகிறது. இதில் 60, 70 சதவீதம் குற்றங்கள் குழந்தைகளை சுற்றியுள்ளவா்களளேயே நடைபெறுகிறது.

ஒரு நிமிஷத்திற்கு இரண்டு குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற துன்பம், அவா்களை பெரியவா்களாகும் வரை பாதித்துக் கொண்டே இருக்கும் என்பதால், அவா்களுடைய வளா்ச்சியும் பாதிக்கும். நமது குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக உள்ளாா்களா என பாா்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு வெள்ளிக்காசுகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும் அவா் வழங்கினாா். இதில் துணை ஆட்சியா் அசோகன், மாணவ, மாணவிகள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது. பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி ... மேலும் பார்க்க