செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

post image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் M.A. பேபி இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து,

* ஆளுநர்களின் அதிகார எல்லையை வெட்டவெளிச்சமாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு

* நாம் அமைத்துள்ள மாநில சுயாட்சிக்கான உயர்நிலைக் குழு

ஆகிய இரண்டு முக்கியமான முன்னேற்றங்களுக்காகத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

இவை தனித்த வெற்றிகள் அல்ல. அண்மையில் மதுரையில் நடந்தேறிய CPIM கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் - அரசியலமைப்புச் சட்டமே முதன்மை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நியமனப் பதவிகளில் இருப்போர் தடுக்க முடியாது எனவும் நாம் முழங்கி முன்னெடுத்த கூட்டாட்சிக் கருத்தியல்களின் வெளிப்பாடு ஆகும்.

எங்கள் உறவு உறுதியாக உள்ளது! கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான ப... மேலும் பார்க்க