செய்திகள் :

திருச்செந்தூர்: தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

post image

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி தூண்டுகை விநாயகர் கோயில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் வைத்து கடந்த ஏப். 17ம் தேதி காலை பூஜைகள் தொடங்கியது.

கடந்த ஏப். 18 மாலை முதல் கால யாக சாலை பூஜைகளும், ஏப். 19 காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலை 3 ஆம் காலை யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) காலை 8 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை 9.30 மணிக்கு கடம் மூலாலயம் புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு தூண்டுகை விநாயகர் விமான கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்கள் கூட்டம்.

தொடர்ந்து, தூண்டுகை விநாயகர் மூலஸ்தானம் கும்பாபிஷேகம், விநாயகருக்கு மஹா அபிஷேகமாகி தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இவ்விழாவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், வட்டாட்சியர் பாலசுந்தரம், நகராட்சித் தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் கண்மணி, திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் அஜித், அற்புதமணி, விவேக், ரோகிணி, விஜயலட்சுமி, ஆய்வர் செந்தில்நாயகி, மேற்பார்வையாளர் செந்தில்குமார், உபயதாரர்கள் ராமபூபதி, ருத்ரமூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி ... மேலும் பார்க்க