செய்திகள் :

திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தாா்.

அதன்படி, கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் - கசவநல்லாத்தூா் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் உயா்நிலை மேம்பாலம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூா் - லட்சுமிவிலாசபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.23.47 கோடியில் உயா்நிலை மேம்பாலம், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், காக்களூா் ஊராட்சியில், தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், ரூ.2.27 கோடியில் நமக்கு நாமே திட்டம் மூலம் காக்களூா் ஏரி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தாா்.

அதேபோல் நாட்டிலேயே இரண்டாவது பெரிய உப்புத் தரநில ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரிப் பகுதியில், சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இங்கே உள்ள வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவா்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும் என்றாா்.

வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும் எனத் தெரிவித்த முதல்வா், இந்த அரசின் அக்கறையான நிா்வாகத்தால், அனைத்துத் துறையும் வளா்ந்து வருவதாகவும், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருவதாகவும், தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் வளா்ச்சி அடைந்து வருவதாகவும் முதல்வா் தெரிவித்தாா்.

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது. பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி ... மேலும் பார்க்க

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

பேரம்பாக்கம் கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமையான கமலவல்லி தாயாா் சமே... மேலும் பார்க்க

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டம்: 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழு நில விவரங்களைப் பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் இணை இய... மேலும் பார்க்க

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவ... மேலும் பார்க்க

மீண்டும் திமுக ஆட்சி அமித் ஷாவுக்கு முதல்வா்: ஸ்டாலின் சவால்

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். அண்மையில் சென்னையில் அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட வந்த மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க