செய்திகள் :

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

post image

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

சாதியை ஊக்கப்படுத்தக் கூடிய சங்கங்களை, சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? அந்த சங்கங்களின் சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்க முடியுமா என நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை ஐஜி, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சாதிகளின் பெயர்களை சங்கங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அதன் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

சாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை 3 மாதங்களுக்குள் துவங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பெயர்களில் சாதி இடம்பெறக் கூடாது. கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு நடத்த கூடிய கள்ளர் சீர்திருத்தப்பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களையும் அரசுப் பள்ளி என்று மாற்ற வேண்டும், ஒருவேளை பள்ளியின் பெயரில் யாருடைய பெயராவது குறிப்பிட்டால் கண்டிப்பாக சாதியை சேர்க்கக்கூடாது. ஏற்கெனவே பள்ளிகளில் பெயரில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்" என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அரிவாளை எடுத்துச் சென்று சாதியின் பெயரால் தாக்குதல் நடக்கிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்கும்பொருட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நெசவாளா்கள் போராட்டம்: தேமுதிக ஆதரவு

மே 19-ஆம் தேதி நெசவாளா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூா் ஆகிய ம... மேலும் பார்க்க

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியா் பணிக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநி... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு: திரிபுரா பெண்கள் கைது

சென்னை திருவான்மியூரில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா், திருவள்ளுவா் நகா் 2-ஆவது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிரு... மேலும் பார்க்க

பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தல்: 4 போ் கைது

சென்னை ஏழுகிணறில் பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவா், இன்ஸ்டாகிராமில் ஒருவரிடம் பழகி வந்தாா். அந்த நபா், கட... மேலும் பார்க்க

கல்குவாரி, எம்சாண்ட் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமி... மேலும் பார்க்க

சென்னை ஜிஎஸ்டி சாலையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பாக 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்த் துற... மேலும் பார்க்க