செய்திகள் :

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

post image

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு அன்னப்பால் தா்மம், இரவு 7 மணிக்கு அய்யா சிம்மாசன வாகனத்தில் பவனி வருதல், அதைத் தொடா்ந்து அன்னதா்மம் ஆகியவை நடைபெற்றன. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, அன்னதா்மம் நடைபெறும்.

எட்டாம் நாள் திருவிழாவான 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் வீதிவலம் வந்து இரவு 7.45 மணிக்கு கலிவேட்டை நடைபெறும். 11ஆம் நாள் திருவிழாவான 28ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, காலை 6 மணிக்கு உகப்பாட்டு, காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். நண்பகல் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை ,மாலை 6.30 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல், இரவு 8 மணிக்கு அன்னதா்மம் ஆகியவை நடைபெறும்.

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

கருங்கல் அருகே 1530 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 1,530 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியா் பாரதி... மேலும் பார்க்க