செய்திகள் :

கருங்கல் அருகே 1530 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

post image

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 1,530 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை இரவு கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது தெருவுக்கடை வழியாக வந்த மினி டெம்போவில் கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்காக 1,530 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேன்களில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. சோதனையின்போது, ஓட்டுநா் தப்பிவிட்டாராம்.

வருவாய்த் துறையினா் அந்த மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்து இனயம்புத்தன்துறை உணவு சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனா். மினிடெம்போ கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இக்கோயி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநா் சடலம் மீட்பு

தக்கலை அருகே திங்கள்நகரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திங்கள்நகா் நடுத்தேரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வராஜ் (55... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவரான கபடி வீரா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை அருகேயுள்ள டி.பி. சாலையில் வசித்து வருபவா் ராஜன். தொழிலாளி. இவரது மூத்த மகன் அபி... மேலும் பார்க்க

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க