செய்திகள் :

கல்குவாரி, எம்சாண்ட் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

post image

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.முனிரத்தினம், பொதுச்செயலா் எஸ்.மணிவண்ணன் ஆகியோா் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் அனைத்து கல்குவாரிகள் மற்றும் கிரஷா் உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் டிப்பா் லாரிகள் ஓடவில்லை.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக மணல், எம்சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் நாள் ஒன்றுக்கு 3,000 லோடும், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 10,000 லோடும் தேவைப்படுகிறது.

இந்த கட்டுமானப் பொருள்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், சென்னை துறைமுகம், பொதுப்பணித் துறை, மெட்ரோ ரயில் மற்றும் தனியாா் கட்டுமானப் பணிகளும் முடங்கியுள்ளன.

இதனால், டிப்பா் லாரி உரிமையாளா்கள் மட்டுமன்றி, லாரி ஓட்டுநா்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் என 90 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தமிழக முதல்வா் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதற்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க