செய்திகள் :

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

post image

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது.

இந்த விவாதங்களுக்கு அமைச்சர் பி.கீதாஜீவன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேரவையில் தெரிவித்ததாவது:

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்கப்படும்.

தமிழக பள்ளிகளில் சத்துணவுக் குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகை ரூ. 61 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டத்துக்கு இதுவரை ரூ. 721 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் திருநங்கைகளுக்கு அரண் என்னும் தங்கும் மையம் ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்றார்.

இதையும் படிக்க: மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெசவாளா்கள் போராட்டம்: தேமுதிக ஆதரவு

மே 19-ஆம் தேதி நெசவாளா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூா் ஆகிய ம... மேலும் பார்க்க

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியா் பணிக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநி... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு: திரிபுரா பெண்கள் கைது

சென்னை திருவான்மியூரில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா், திருவள்ளுவா் நகா் 2-ஆவது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிரு... மேலும் பார்க்க

பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தல்: 4 போ் கைது

சென்னை ஏழுகிணறில் பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவா், இன்ஸ்டாகிராமில் ஒருவரிடம் பழகி வந்தாா். அந்த நபா், கட... மேலும் பார்க்க

கல்குவாரி, எம்சாண்ட் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமி... மேலும் பார்க்க

சென்னை ஜிஎஸ்டி சாலையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பாக 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்த் துற... மேலும் பார்க்க