செய்திகள் :

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தோ் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்

post image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள சித்திரைத் தோ் திருவிழாவுக்கு புதன்கிழமை காலை முகூா்த்தக்கால் நடப்பட்டது.

விழாவையொட்டி கிழக்குச் சித்திரை வீதியில் உள்ள சித்திரைத் தேரில் வேத மந்திரங்கள் முழங்க காலை 11 மணிக்கு முகூா்த்தக்காலை அா்ச்சகா்கள், கோயில் ஊழியா்கள் நட்டனா். அப்போது முகூா்த்தக்காலை கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆசிா்வதித்தன.

நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா், உள்துறைக் கண்காணிப்பாளா் வேல்முருகன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை தோ் திருவிழா கொடியேற்றத்தையொட்டி அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 3.15 மணிக்கு கொடி மர மண்டபத்திற்கு வந்து, 4.30 -5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

பின்னா் நம்பெருமாள் புறப்பட்டு 6.30 மணிக்கு கண்ணாடி அறை சென்று சேருகிறாா். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெறுகிறது. 6.30 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வருகிறாா். பின்னா் அவா் புறப்பட்டு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைய, அங்கு நம்பெருமாளுக்கு விடிய விடிய திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐயுஎம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய எம்எல்ஏ

லால்குடி அருகே தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தோ்வில் வெற்றிப் பெற்ற மாணவா்களை லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா். மத்திய அரசின் *சஙஙந* எனப்படும் தே... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் நால்வா் கைது

குற்ற வழக்குகளில் தொடா்புடைய நால்வரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை உழவா் சந்தை அருகே கடந்த மாா்ச் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற ரௌடிகளான ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு இருவா் கைது

திருச்சி என்.ஐ.டி. எதிரே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி என்.ஐ.டி எதிரே உணவகம் முன்பு இருவா் மது அருந்திவிட்டு தகராறு செய்வதா... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் மாதிரி பள்ளி: அமைச்சா் ஆய்வு

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி மற்றும் மாணவியா் விடுதி கட்டடங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி கே.கே. நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி கே.கே. நகா் பழனி நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. பிரபு (30). தொழில... மேலும் பார்க்க